Saturday, October 12, 2013

சொல் அந்தாதி - 5


சொல் அந்தாதி - 5 புதிருக்காக, கீழே  6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  இல்லற ஜோதி -  களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்   
2.  இது சத்தியம்               
3.  மனைவி    
4.  பொன்னித் திருநாள்   
5.  தாய்க்குத் தலைமகன்
6.  சின்னக் கவுண்டர்    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, 6-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, 6-வது   திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி - 4 புதிருக்கான விடைகள்:  
1.   அச்சமில்லை அச்சமில்லை  -  ஓடுகிற தண்ணியிலே ஒரச விட்டேன்  
2.   பெண்ணரசி                                 -  நெத்தியிலே நீல நிறப் பொட்டு              
3.   செம்பருத்தி                                 -   பாட்டுப் பூவே மெட்டுப் பாடு   
4.   நிலவு சுடுவதில்லை               - பூவே பனிப் பூவே நானும் மலர் தானே  
5.   தைப் பொங்கல்                         - தானே சதிராடும் மாலை வெயில் வேளை     
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav,   மதுமதி,  முத்து.
இவர்கள் அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.        
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

8 comments:

  1. வணக்கம்
    அறிவுக்கு விருந்தாக அமையும் புதிர்கள் பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரூபன்,

    உங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். "Followers" click செய்து இணையவும்.

    ReplyDelete
  3. 1. இல்லற ஜோதி - களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்
    2. இது சத்தியம் - காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
    3. மனைவி - அன்னை போல என்னை பார்த்த அன்பு தெய்வமே
    4. பொன்னித் திருநாள் - ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து
    5. தாய்க்குத் தலைமகன் - பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
    6. சின்னக் கவுண்டர் - கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே

    ReplyDelete
    Replies
    1. பார்த்திபன்,

      நெடுநாட்களுக்குப் பின் புதிரில் கலந்துகொண்டு, சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  4. 1. இல்லற ஜோதி - களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்
    2. இது சத்தியம் - காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
    3. மனைவி - அன்னை போல என்னை பார்த்த அன்பு தெய்வமே
    4. பொன்னித் திருநாள் - ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து
    5. தாய்க்குத் தலைமகன் - பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
    6. சின்னக் கவுண்டர் - கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி

      Delete
  5. 1. இல்லற ஜோதி - களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்
    2. இது சத்தியம் காதலிலே பற்று வைத்தாள்
    3. மனைவி அன்னை போல என்னை பார்த்தா
    4. பொன்னித் திருநாள் ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து
    5. தாய்க்குத் தலைமகன் பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
    6. சின்னக் கவுண்டர் கண்ணு படப் போகுதையா

    (தங்கள் புதிரமைக்கும் திறனும், வேகமும்....கண்ணு படப் போகுதையா!)

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்கள் விடைகள் எல்லாம் சரியே பாராட்டுக்கள். நன்றி.
      உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

      Delete