Sunday, June 30, 2013

எழுத்துப் படிகள் - 30



எழுத்துப் படிகள் - 30 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   விஜயகாந்த்  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)   விஜயகாந்த்  நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   இளைய கொங்கு வேளாளர்?    (3,5)
       (கண்ணுபடப் போகுதய்யா )   
2.   இது நான்குமறை தீர்ப்பு  (5,6)    
        (அம்பிகையை சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம் )  
3.   மாதர் மயங்கிய  பாண்டவர் (3)
       (செம்பருத்தி பூவுக்கு சேலை என்ன செல்லம்மா)
4.   நிறைவான நெஞ்சம்  (4,3)
       (ஒற்றுமையே நமக்கு உயிர்நாடி அது உள்ளத்திலூறும் அன்பை காட்டிடும் கண்ணாடி )
5.   இனிமையான இசை (3,3)
            (அம்மா என்று நீ அழைத்தால்  ----- -----  பொழியுமடா ) 
6.   ஆளும் சர்க்கார்  (6)
       (குயில்கள் வாழும் கலைக்கூடம் கொண்டது எனது ----- )
 
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்

 
குறிப்பு:
 
விடைக்கான திரைப்படத்தில் விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்.  
 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 29 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.   பிரதிபலிக்கும் சப்தம்   (4)                                   -   எதிரொலி  
      (புதிய வானம் புதிய வானம், புதிய பூமி புதிய பூமி )   
2.   தர்மத்தின் பிம்பம்   (4,3)                                       -    நீதியின் நிழல் 
      (குத்து  விளக்கோ ஒன்று  வெள்ளிக்குடமோ ரெண்டு )  
3.   மறு பிறவி (3,4)                                                         -    புனர் ஜென்மம் 
      (எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை )
4.   மதுவும் தலையற்ற தபாலும்  (3,3)               -     தேனும் பாலும் 
      (மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி  )
5.   எனக்கு விருப்பமான வேந்தனே (2,2,3) -    என் ஆசை ராசாவே       
          (என் ஆசையும் நிறைவேறிடும்     ராசாவே உன்னை நம்பி  இந்த ரோஜாப்பூ ) 
6.   நாங்கள் உதித்த பூமி   (2,4,2)                            -      நாம் பிறந்த மண் 
       (ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே )
7.   முரட்டு ரத்தினம்  (4,3)                                          -     முரடன் முத்து 
       (தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே  )
 
 
இறுதி விடை:    எதிர்பாராதது          
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  Suji, சாந்தி நாராயணன், முத்து, வைத்தியநாதன்       
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்

Monday, June 24, 2013

சொல் வரிசை - 30



கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      டிக் டிக் டிக்                                          ( ------   ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் )
2.      முத்தான முத்தல்லவோ ( ------   பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் )
3.      நீல மலர்கள்                        ( --------   ஒரு பூ மலரும்  அல்லிப்பூ  )
4.      ஓரம் போ                              (  -------  என்ன மாயம் இது எதுவரை போகும் )
5.      7-ம் அறிவு                             ( -------- அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ ) 
6     ஆனந்த ஜோதி                   ( -------- இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா )
7.      வாழ்க்கை                            ( -------- மாறலாம் நம் காதல் மாறுமா )


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல், சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 29 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                       

1.      கண்ணுக்குள் நிலவு           ( ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது )
2.      ஒரு தலை ராகம்                ( இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் )
3.      முத்துச் சிப்பி                       ( ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல  )
4.      ஸ்ரீராகவேந்திரர்                  ( உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் விடிய விடிய சொந்தம் )
5.      நம்ம வீட்டு தெய்வம்          ( எனக்கும்  உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ) 
6     மங்காத்தா                          (  இது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா )
7.      காக்கும் கரங்கள்               ( திருநாள்  வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது )


 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ஒருநாள் இது ஒருநாள்  
உனக்கும் எனக்கும் இது திருநாள்              

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      அன்புக்கோர் அண்ணி        
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, சாந்தி நாராயணன், முத்து, 10அம்மா, வைத்தியநாதன்      

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.