Monday, August 5, 2013

எழுத்து அந்தாதி - 7



எழுத்து அந்தாதி - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.   தத்தித் தாவிக் குதிக்கும் பருவம்  (4,3)                              (2006)
2.   சொந்த நாட்டில் வாழ்பவர்  (3)                                            (விஜயகாந்த்)
3.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள்  (3,4)   (சிவாஜி கணேசன்)
4.  மத்தளம் கொட்டுவதில் மகாவித்வான்  (5,8)              (சிவாஜி கணேசன்)

5.  இனிப்பாய் உள்ளதே  (6)                                                      (ஜீவா)   
6.   ----  ----, நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது (4,4) (1997)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 6 க்கான விடைகள்: 
 
 
1.  அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)    - சுகம் எங்கே 
2.  குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)     - கேடி பில்லா கில்லாடி ரங்கா 
3.  வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம்  (2)  (2011)                                                                      -  காசி 

4.  இளையவரில் சிறியவர் பிரபு  (3,3)  (1992)                                                                                  -  சின்ன தம்பி 
5.  ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)                                                                                         - பிரியா  
6.   ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது  (2,1) (1966)  - யார் நீ 
7.  நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா  (4,2,4) (1976)                                                     - நீதிக்கு தலை வணங்கு 
8.  பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய்  (4,3)  (2010)                                         - குட்டிப் பிசாசு 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, நாகராஜன், வைத்தியநாதன்.  கீதா ராமமூர்த்தி
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

 
ராமராவ் 

5 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.


    ReplyDelete
  3. 10அம்மா,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  4. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. சாந்தி நாராயணன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete