Tuesday, July 30, 2013

சொல் வரிசை - 34



கீழே   7 (ஏழு )  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.    கன்னிப் பருவத்திலே                  ( ------  வண்ண ரோசாவாம் பாத்தா கண்ணு மூடாதாம்)
2.    நிச்சய தாம்பூலம்                     (  ------  தாவணியில் பார்த்த உருவமா)
3.    குமரிக் கோட்டம்                      ( -------  அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா)
4.    என் ஜீவன் பாடுது                     (  -------  வச்சுக்கோ எந்தன் அன்பு மனச )
5.    போஸ்                                           ( --------  கண் வைத்தது தானோடி) 
6   பரிசு                                                ( -------- கருப்பு குங்குமம் சிவப்பு )
7.    கல்லும் கனியாகும்                 ( -------- நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே )
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 33 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                  

1.     தென்றலே என்னைத் தொடு      ( தென்றல் வந்து என்னைத் தொடும் )
2.     திருப்பாச்சி                                  ( நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்லே )
3.     ஈரமான ரோஜாவே                     ( தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு )
4.     குட்டி                                            ( நீ காதலிக்கும் பொண்ணு காதளிக்கலேன்னா கவலைப்படாதே )
5.     பவுனு பவுனுதான்                       ( தேதி ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்லி காத்திருக்கேன்) 
6    பெண்                                           ( சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா )
7.     இறைவன் கொடுத்த வரம்         ( மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் )
8.     போக்கிரி                                     ( நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் )
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

தென்றல் நீ  தென்றல் நீ  
தேதி சொன்ன மங்கை நீ                 

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      தந்து விட்டேன் என்னை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி       

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. Madhav,

    சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. வைத்தியநாதன்,

    சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  3. மதுமதி,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  4. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete