Sunday, June 9, 2013

எழுத்துப் படிகள் - 28



எழுத்துப் படிகள் - 28 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   ரஜினிகாந்த்  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)  ரஜினிகாந்த்   நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   நீலாம்பரியின் எதிரி   (5)
      (மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் )   
2.   ராஜேஷ்குமாரின் நாவல்  (10,4)
      (அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா )  
3.   பரபரக்கும் கைகள் (5,5)
      (மேகம் முந்தானை ஆடுது முன்னாலே )
4.   காவடி பக்தன் ஆக மாறியவன்  (7)
      (ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி  )
5.   பட்டாளத்தான்  (3,3)
          (சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும்  ) 
6.   நீதிக்கு முதல்வன்  (6,4)
       (தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு )
 

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 27 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.   விடாமுயற்சியால் செயல் முடித்தல் (3)         -  சாதனை  
      (ஓ வானம்பாடி உன்னை நாடி  எங்கும்  தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி )   
2.   பாஞ்சாலங்குறிச்சி மன்னன்  (2,4,3,4)                 - வீர பாண்டிய கட்ட பொம்மன் 
      (இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே )  
3.   சிரம் தாழ்த்தா மன்னன்   (6)                                   -  வணங்காமுடி 
      (வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா )
4.    நற்குடியில் பிறந்த, கண்ணனின் கோபிகை  (5,2) - குலமகள் ராதை 
      (உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை )
5.   அரசியான, M.L. வசந்தகுமாரியின் தாயார் (2,5) - ராணி லலிதாங்கி 
          (ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே ) 
6.    நிறைவான இதிகாசம் (5,5)                                       - சம்பூர்ண ராமாயணம் 
       (பாதுகையே துணையாகும் எந்நாளும்  )
 
இறுதி விடை:    சாரங்கதாரா        
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  முத்து,  Madhav,  Suji, வைத்தியநாதன், சாந்தி நாராயணன்      
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்

5 comments:

  1. Suji,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. சாந்தி நாராயணன்,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. Madhav,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. நாகராஜன்,

    சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete