Monday, June 24, 2013

சொல் வரிசை - 30



கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      டிக் டிக் டிக்                                          ( ------   ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் )
2.      முத்தான முத்தல்லவோ ( ------   பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் )
3.      நீல மலர்கள்                        ( --------   ஒரு பூ மலரும்  அல்லிப்பூ  )
4.      ஓரம் போ                              (  -------  என்ன மாயம் இது எதுவரை போகும் )
5.      7-ம் அறிவு                             ( -------- அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ ) 
6     ஆனந்த ஜோதி                   ( -------- இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா )
7.      வாழ்க்கை                            ( -------- மாறலாம் நம் காதல் மாறுமா )


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல், சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 29 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                       

1.      கண்ணுக்குள் நிலவு           ( ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது )
2.      ஒரு தலை ராகம்                ( இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் )
3.      முத்துச் சிப்பி                       ( ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல  )
4.      ஸ்ரீராகவேந்திரர்                  ( உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் விடிய விடிய சொந்தம் )
5.      நம்ம வீட்டு தெய்வம்          ( எனக்கும்  உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ) 
6     மங்காத்தா                          (  இது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா )
7.      காக்கும் கரங்கள்               ( திருநாள்  வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது )


 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ஒருநாள் இது ஒருநாள்  
உனக்கும் எனக்கும் இது திருநாள்              

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      அன்புக்கோர் அண்ணி        
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, சாந்தி நாராயணன், முத்து, 10அம்மா, வைத்தியநாதன்      

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. முத்து,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. பாராட்டுக்கள்

    ReplyDelete