Wednesday, November 20, 2013

சொல் அந்தாதி - 9


சொல் அந்தாதி   9   புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1.  தாய்க்கு தலைமகன்  -  அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட       
2.  கண்ணே பாப்பா                  
3.  அம்மா எங்கே       
4.  மகளே உன் சமத்து       
5.  நவராத்திரி         

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது    திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி 8 புதிருக்கான விடைகள்:  
 
1.  கைராசி                            -  அன்புள்ள அத்தான் வணக்கம்    
2.  அவன் ஒரு சரித்திரம்  -  வணக்கம் பலமுறை சொன்னேன்                 
3.  ஸ்ரீ      - கண்ணே மொழி வேண்டாம் விழி மட்டும் போதும்   
4.  காவலன் அவன் கோவலன் - போதும் போதும் போடா போடா      
5.  வில்லு  -  வாடா மாப்பிள்ளே வாழப்பழத் தோப்பிலே      
 
  
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   
 
முத்து சுப்ரமண்யம் 
தினேஷ் குமாரராமன்  
மாதவ் மூர்த்தி
மதுமதி விட்டல்ராவ்  
 
இவர்கள்  அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. 1. தாய்க்கு தலைமகன் - அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட
    2. கண்ணே பாப்பா - கண்ணே பாப்பா என் கனி முத்து பாப்பா
    3. அம்மா எங்கே - பாப்பா பாப்பா கதை கேளு
    4. மகளே உன் சமத்து - கதை ஒன்று சொல்லவா
    5. நவராத்திரி - சொல்லவா கதை சொல்லவா

    ReplyDelete
  2. சொல் அந்தாதி - 9

    1.அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட
    2.கண்ணே பாப்பா என் கனி முத்து பாப்பா
    3.பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை
    4.கதை ஒன்று சொல்லவா காதல் கதை ஒன்று சொல்லவா
    5.சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா

    ReplyDelete
  3. 1. தாய்க்கு தலைமகன் - அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட
    2. கண்ணே பாப்பா - கண்ணே பாப்பா என் கனிமுத்துப் பாப்பா
    3. அம்மா எங்கே - பாப்பா பாப்பா கத கேளு காக்கா நரியின் கத கேளு
    4. மகளே உன் சமத்து - கதை ஒன்று நான் சொல்லவா
    5. நவராத்திரி - சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா

    ReplyDelete
  4. முத்து, மதுமதி, மாதவ்,

    உங்கள் மூவரது விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete