Tuesday, July 9, 2013

எழுத்துப் படிகள் - 31



எழுத்துப் படிகள் - 31 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன் நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (7)   சிவாஜி கணேசன் நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   பிரபலமான பாடலின் வரிகளில் கொஞ்சம்  அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   அறுபடைவீடு     (3)
       (சந்தன வாடையடிக்குது )   
2.   அதிகாலையில் தோன்றும் சுக்கிரன் (5)    
        (கொடுத்துப் பார் பார் பார் உந்தன் அன்பை )  
3.   அன்னைக்கொரு ஆராரோ  (4,2,4)
       (தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என்னாசை சின்னம்மா)
4.   யாருக்கும் பணியாதவன்  (6)
       (மோகனப் புன்னகை வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே )
5.   புண்ணியத்தால் அடைந்த புத்திரன் (8)
            (உலகின் முதல் இசை தமிழிசையே ) 
6.   மும்மூர்த்திகள்  (3,6)
       (வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ )
7.    எமது மொழி எமது ஜனங்கள்  (2,3,2,4)
        (தமிழ் எங்கள் உயிரானது  + ஒரு தாய் மக்கள் நாமென்போம்) 


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 30 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.   இளைய கொங்கு வேளாளர்?    (3,5)       - சின்ன கவுண்டர் 
       (கண்ணுபடப் போகுதய்யா )   
2.   இது நான்குமறை தீர்ப்பு  (5,6)                      - நம்பினார் கெடுவதில்லை 
        (அம்பிகையை சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம் )  
3.   மாதர் மயங்கிய  பாண்டவர் (3)                  - தர்மா 
       (செம்பருத்தி பூவுக்கு சேலை என்ன செல்லம்மா)
4.   நிறைவான நெஞ்சம்  (4,3)                             - நெறஞ்ச மனசு 
       (ஒற்றுமையே நமக்கு உயிர்நாடி அது உள்ளத்திலூறும் அன்பை காட்டிடும் கண்ணாடி )
5.   இனிமையான இசை (3,3)                                       - அமுத கானம்    
            (அம்மா என்று நீ அழைத்தால்  அமுத கானம்  பொழியுமடா ) 
6.   ஆளும் சர்க்கார்  (6)                                           -  அரசாங்கம் 
       (குயில்கள் வாழும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் )
 
 
இறுதி விடை:    சிம்மாசனம்           
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  Suji, முத்து, 10அம்மா, யோசிப்பவர்       
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்

7 comments:

  1. பாலகணேஷ்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  3. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. Suji,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. கீதா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள்
    திரைஜாலத்திற்கு உங்கள் புதிய வருகைக்கு மிக்க நன்றி.


    ReplyDelete
  6. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  7. மதுமதி,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete