Friday, April 10, 2020

சொல் வரிசை - 248



சொல் வரிசை - 248 புதிருக்காக, கீழே ஆறு (6)     திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   திருவிளையாடல் ஆரம்பம்(---  ---  ---  ---  கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே)  


2.   அதர்மம்(---  ---  ---  ---  ---  --- நோய் நொடிகள் ஏதுமின்றி என் மகராசா)

3.   நினைவுகள் உன்னோடு(---  ---  --- நினைவா இது கொல்லும்  விஷமா)

4.   எங்க தம்பி(---  ---  ---  --- புது தேனோடு மலராடும் வீடு)

5.   மதன மாளிகை(---  ---  ---  --- தேடி வானில் பறக்கிறது)
   
6.   சலங்கையில் ஒரு சங்கீதம்(---  ---  --- அழகே இது பெண்மையா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.திருவிளையாடல் ஆரம்பம்--கண்ணுககுள் ஏதோ,கண்ணுக்குள் ஏதோ
    2.அதர்மம்-------------------நூறு வயசு வாழ வேணும் என் மகராசா
    3.நினைவுகள் உன்னோடு--நிலவா இது கொள்ளிக் குடமா ?
    4.எங்க தம்பி----------இது மானோடு மயிலாடும் காடு
    5.மதன மாளிகை-----ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி
    6.சலங்கையில் ஒரு சங்கீதம்---கனவா இது உண்மையா ?

    பாடல் வரிகள்

    கண்ணுக்குள் நூறு நிலவா ?
    இது ஒரு கனவா?

    திரைப்படம்
    வேதம் புதிது

    ReplyDelete
  2. 1. திருவிளையாடல் ஆரம்பம் - கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

    2. அதர்மம் - நூறு வயசு வாழ வேணும் என் மகராசா

    3. நினைவுகள் உன்னோடு - நிலவா ??? ???

    4. எங்க தம்பி - இது மாநாடு மயிலாடும் காடு

    5. மதன மாளிகை - ஒரு சின்னப் பறவை அன்னையை

    6. சலங்கையில் ஒரு சங்கீதம் - கனவா இது உண்மையா

    இறுதி விடை :

    கண்ணுக்குள் நூறு நிலவா
    இது ஒரு கனவா
    -வேதம் புதிது

    By Madhav.

    ReplyDelete