Friday, May 31, 2019

சொல் அந்தாதி - 120


சொல் அந்தாதி - 120  புதிருக்காக, கீழே    5  (ஐந்து)  திரைப்படங்களின்     பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. ராஜாவின் பார்வையிலே - அம்மன் கோயில் எல்லாமே  
2. ரசிகன் ஒரு ரசிகை             
3. விடிவெள்ளி                 
4. இன்று நேற்று நாளை               
5. நினைத்ததை முடிப்பவன்                 
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்     பின்னூட்டம் மூலமாக  மட்டும்    அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

http://friendstamilmp3.net/Album/

ராமராவ்

Thursday, May 30, 2019

சொல் வரிசை - 209



சொல் வரிசை - 209   புதிருக்காக, கீழே  ஏழு   (7) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மறுபடியும்(---  ---  ---  --- நேரம் உண்டு வாழ்விலே) 
  
2.   புதியவன்(---  ---  --- பூமியில் புதிய கோலம்)

3.   பாசமழை(---  --- வாசலில் வந்தது சொந்தம் தானே)

4.   நம்ம வீட்டு லட்சுமி(---  ---  ---  --- நல்ல குடும்பம் தெய்வீகம்  

5.   தங்கைக்கோர் கீதம்(---  ---  ---  --- நினைவினில் மலருது நெஞ்சத்தில்)

6.   பொன்னூஞ்சல்(---  ---  --- நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன்)

7.   நான்(---  ---  ---  --- பயத்தினிலே வாழ்கிறேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Tuesday, May 21, 2019

எழுத்துப் படிகள் - 258




எழுத்துப் படிகள் - 258 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5)  ஜெமினி கணேசன்  கதாநாயகனாக    நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 258  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   தெனாலிராமன்     

2.   சிம்மசொப்பனம்                 

3.   ரத்தபாசம்              

4.   மருத நாட்டு வீரன்         

5.   இருவர் உள்ளம்            

6.   எங்கிருந்தோ வந்தாள்    

7.   வணங்காமுடி 

8.   மரகதம்     




இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்