Saturday, December 28, 2013

சொல் அந்தாதி - 14

 

சொல் அந்தாதி   14    புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  கை கொடுத்த தெய்வம் -  ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ    
 
2.  நாயகன்                       
 
3.  கை வரிசை             
 
4.  கூட்டுப் புழுக்கள்              

5.  கடவுள் அமைத்த மேடை               
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  13 புதிருக்கான விடைகள்:  
 
1.  நெஞ்சிருக்கும் வரை -  முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்   
 
2.  உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்  - என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி                     
 
3.  ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்            
 
4.  பாச மலர் - யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ             

5.  ரெண்டு  - யாரோ எவளோ என்று தெரியவில்லை              
 
       
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   

1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
3. மதுமதி விட்டல்ராவ்

இவர்கள்  அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. 1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
    2. நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்
    3. கை வரிசை - சங்கீதம் மலர்கின்ற நேரம்
    4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே
    5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை இங்கே

    ReplyDelete
  2. 1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

    2. நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்

    3. கை வரிசை - சங்கீதம் மலர்ந்திடும் நேரம் மங்காத கவிதரும் காலம்

    4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி தங்க துரையே

    5. கடவுள் அமைத்த மேடை - தங்க துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ

    ReplyDelete
    Replies
    1. மாதவ் பிறகு அளித்த சரியான விடைகள்:
      4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே
      5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே

      Delete