Tuesday, December 17, 2013

சொல் அந்தாதி - 13

 

சொல் அந்தாதி   13    புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  நெஞ்சிருக்கும் வரை -  முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்   
 
2.  உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்                      
 
3.  ஜன்னல் ஓரம்            
 
4.  பாச மலர்             

5.  ரெண்டு              
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  12 புதிருக்கான விடைகள்:  
1.  7-ஆம் அறிவு   -  முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ 
 
2.  கிராமத்து மின்னல் - நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே        
 
3.  கடல் மீன்கள் - மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே           
 
4.  அன்னையின் ஆணை - நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயா சாகரி           

5.  சின்ன மணி - ஈஸ்வரி உமையே சங்கரி உனையே இசையால்               

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   

1. மதுமதி விட்டல்ராவ்
2. முத்து சுப்ரமண்யம்
3. மாதவ் மூர்த்தி

இவர்கள்  அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 

3 comments:

  1. 1. நெஞ்சிருக்கும் வரை - முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
    2. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
    3. ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே
    4. பாச மலர் - யார் யார் யார் அவள் யாரோ
    5. ரெண்டு - யாரோ எவளோ என்று தெரியவில்லை

    ReplyDelete
  2. 1. நெஞ்சிருக்கும் வரை - முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

    2. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

    3. ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்

    4. பாச மலர் - யார் யார் யார் அவர் யாரோ

    5. ரெண்டு - யாரோ எவளோ என்று தெரியவில்லை

    ReplyDelete
  3. சொல் அந்தாதி - 13
    1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
    2.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
    3.என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்
    4.யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
    5.யாரோ எவளோ என்று தெரியவில்லை

    ReplyDelete