Saturday, November 30, 2019

சொல் வரிசை - 229



சொல் வரிசை - 229   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   வாலி(---  ---  --- கட்டிலில் கட்டி வை) 
  
2.   சண்டமாருதம்(---  ---  --- பேசிக்கொண்டே தூங்காமல்)

3.   தாவணிக் கனவுகள்(---  ---  --- இளமாலை சுபவேளை)

4.   நெஞ்சில் ஓர் ஆலயம்(---  --- சொல் சொல் சொல் என்னுயிரே  

5.   உள்ளம் கேட்குமே(---  ---  --- இதயம் ரெண்டாக பிளந்தவளே)

6.   பெண்ணரசி(---  ---  --- தொட்டாலே கோபம் வரும் தொடாதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. வாலி - நிலவைக் கொண்டு வா

    2. சண்டமாருதம் - பார்த்துக் கொண்டே பேசாமல்

    3. தாவணிக் கனவுகள் - வானம் நிறம் மாறும்

    4. நெஞ்சில் ஓர் ஆலயம் - சொன்னது நீதானா

    5. உள்ளம் கேட்குமே - என்னைப் பந்தாடப் பிறந்தவளே

    6. பெண்ணரசி - தொடாதே தொடாதே தொடாதே

    இறுதி விடை :
    நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
    - சவாலே சமாளி
    - Madhav

    ReplyDelete
  2. 1. வாலி - நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
    2. சண்டமாருதம் - பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
    3. தாவணிக் கனவுகள் - வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    4. நெஞ்சில் ஓர் ஆலயம் - சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
    5. உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே
    6. பெண்ணரசி - தொடாதே..தொடாதே..தொடாதே..தொட்டாலே கோபம் வரும் தொடாதே

    விடை: நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப்பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே
    படம் : சவாலே சமாளி (1971)
    பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
    இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

    ReplyDelete
  3. தொடக்கச் சொற்கள்
    1.வாலி---------------நிலவைக் கொண்டு வா 2.சண்ட மாருதம்-----பார்த்துக் கொண்டே பேசாமல்
    3.தாவணிக் கனவுகள்--வானம் நிறம் மாறும் 4.நெஞ்சில் ஓர் ஆலயம்--சொன்னது நீ தானா?
    5.உள்ளம் கேட்குமே-----என்னைப் பந்தாடப் பிறந்தவளே 6.பெண்ணரசி---------தொடாதே தொடாதே தொடாதே

    சொல்வரிசை பாடல் வரிகள்

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே

    படம்
    சவாலே சமாளி 

    ReplyDelete