Friday, March 20, 2020

சொல் வரிசை - 245



சொல் வரிசை - 245 புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சார்லி சாப்ளின்(---  ---  ---  ---  --- அவ கன்னம் பாத்தா அய்யோ அம்மா)  


2.   பூம்புகார்(---  ---  ---  --- என்ன நினைத்தாய் நான் உன்னை நினைத்தேன்)

3.   அரச கட்டளை(---  ---  ---  --- என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்)

4.   ஒரு ஊர்ல(---  ---  --- தெருவில் வந்த தெய்வமே)

5.   மர்மயோகி(---  ---  --- புது மன்மதனைக் கொண்டேனே)
   
6.   சமஸ்தானம்(---  ---  ---  ---  --- நெஞ்சில நெஞ்சில பூசட்டுமா மஞ்சளை)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. சார்லி சாப்ளின் - அவ கண்ணப் பாத்தா அய்யோ அம்மா

    2. பூம்புகார் - என்னை முதன் முதலாக பார்த்த போது

    3. அரச கட்டளை - என்னை பாட வைத்தவன் ஒருவன்

    4. ஒரு ஊர்ல - தேடி என்னைக் காணவே

    5. மர்மயோகி - வந்த வழி மறந்தேனே

    6. சமஸ்தானம் - அஞ்சல அஞ்சல

    இறுதி விடை :
    அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
    - வாரணம் ஆயிரம்

    By Madhav

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1.சார்லி சாப்ளின்-------அவ கண்ணப் பார்த்தா அய்யோஅம்மா
    2.பூம்புகார்-----------என்னை முதன்முதலாகப் பார்த்த போது
    3.அரச கட்டளை------என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
    4.ஒரு ஊர்ல--------- தேடி என்னைக் காணவே
    5.மர்மயோகி----------வந்த வழி மறந்தேனே
    6.சமஸ்தானம்------- அஞ்சல அஞ்சல கொத்தமல்லி கொத்தமல்லி காடு

    பாடல் வரிகள்

    அவ என்னை என்னை
    தேடி வந்த அஞ்சல

    திரைப்படம்

    வாரணம் ஆயிரம்

    ReplyDelete