Friday, November 11, 2016

சொல் வரிசை - 147



சொல் வரிசை - 147  புதிருக்காக, கீழே     ஆறு   (6)  திரைப்படங்களின் பெயர்களும்,  அவைகளில்   ஒவ்வொரு   திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    ஒரு தாய் மக்கள் (---  ---  ---  கண்ணில் ஆடும் மாயவன்)
  
2.    காதல் ரோஜாவே (---  ---  ---  ---  ---  --- விடிவெள்ளி ஒன்று கண்டேன்)

3.    பிரியமானவளே (---  ---  ---  ---  --- என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை) 

4.    உன்னுடன் (---  ---  --- நெஞ்சை களவாடி ஓடி விட்டான்) 

5.    ஈரமான ரோஜாவே (---  ---  ---  ---  ---  பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு) 

6.    கடவுள் அமைத்த மேடை (---  ---  ---  உன் கண்களால் நீ பேசு) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. ஒரு தாய் மக்கள் - கண்ணன் எந்தன் காதலன்

    2. காதல் ரோஜாவே - மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்

    3. பிரியமானவளே - என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

    4. உன்னுடன் - கண்டுபிடி அவனைக் கண்டுபிடி

    5. ஈரமான ரோஜாவே - வா வா அன்பே பூஜை உண்டு

    6. கடவுள் அமைத்த மேடை - தென்றலே நீ பேசு

    இறுதி விடை :
    கண்ணன் மனம் என்னவோ
    கண்டு வா தென்றலே
    - வசந்த ராகம்

    - Madhav

    ReplyDelete