Saturday, July 2, 2016

சொல் அந்தாதி - 44

சொல் அந்தாதி - 44 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  கல்யாண ஊர்வலம் - எந்தன் உயிர் காதலன் கண்ணன்
         
2.  கண்ணன் ஒரு கைக்குழந்தை            

3.  சார் ஐ லவ் யூ              

4.  ஐந்து லட்சம்             

5.  அவன் பித்தனா          


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. கல்யாண ஊர்வலம் - எந்தன் உயிர் காதலன் கண்ணன்

    2. கண்ணன் ஒரு கைக்குழந்தை - கண்ணன் அருகே பாட வேண்டும்

    3. சார் ஐ லவ் யூ - இங்கே இறைவன் என்னும் கலைஞன்

    4. ஐந்து லட்சம் - படைத்தான் பூமியை இறைவன்

    5. அவன் பித்தனா - இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்

    ReplyDelete