Sunday, November 16, 2014

சொல் வரிசை - 73


சொல் வரிசை - 73  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   நிச்சய தாம்பூலம் (--- --- --- --- --- வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலைகள் வளர்த்தானே)
2.   ஆயுசு நூறு (--- --- --- வண்ணஜாலம் என்ன பாவை மேனி அது) 
3.   நான் பாடும் பாடல் (--- --- --- --- ராகம் பாடும் நேரம் என்று)
4.   அன்னமிட்ட கை (--- --- --- --- தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா)
5.   நாம் மூவர் (--- --- --- ஒரு வாலிபன் தொடலாமா) 
6.   போடிநாயக்கனூர் கணேசன் (--- --- --- கொட்டுதடி கோடை மழை) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் முத்துராமனும் மஞ்சுளாவும் நடித்திருந்தார்கள்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

1 comment:


  1. 1. நிச்சய தாம்பூலம் (--- --- --- --- --- வளர்த்தானே ) படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    2. ஆயுசு நூறு (--- --- --- வண்ணஜாலம் என்ன பாவை மேனி அது) - பிரம்ம தேவன் அவன்
    3. நான் பாடும் பாடல் (--- --- --- --- ராகம் பாடும் நேரம் என்று) - தேவன் கோயில் வீணை ஒன்று
    4. அன்னமிட்ட கை (--- --- --- --- தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா) - பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
    5. நாம் மூவர் (--- --- --- ஒரு வாலிபன் தொடலாமா) - வயது வந்த பெண்ணை
    6. போடிநாயக்கனூர் கணேசன் (--- --- --- கொட்டுதடி கோடை மழை) -கோலம் போட்ட வாசலிலே

    இறுதி விடை :
    படைத்தானே பிரம்ம தேவன்
    பதினாறு வயது கோலம்
    - எல்லோரும் நல்லவரே

    ReplyDelete