Sunday, December 4, 2016

சொல் அந்தாதி - 62


சொல் அந்தாதி - 62   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சூர சம்ஹாரம் - நீலக் குயிலே சோலைக் குயிலே      
  
2.  புலன் விசாரணை                   

3.  வீட்ல விசேஷங்க                       

4.  அவள் வருவாளா                      

5.  மோகம் முப்பது வருஷம்                       


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

2 comments:

  1. 1. சூர சம்ஹாரம் - நீலக் குயிலே சோலைக் குயிலே

    2. புலன் விசாரணை - குயிலே குயிலே கொஞ்சும் தமிழே

    3. வீட்ல விசேஷங்க - மலரே தென்றல் பாடும் கானம் இது

    4. அவள் வருவாளா - இது காதலின் சங்கீதம்

    5. மோகம் முப்பது வருஷம் - சங்கீதம் ரகங்கள் இல்லாமலா

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 4.12.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    குயிலே குயிலே கொஞ்சும் தமிழே
    மலரே தென்றல் பாடும் கானம் இது
    இது காதலின் சங்கீதம்
    சங்கீதம் ராகங்கள் இல்லாமலா

    ReplyDelete