Tuesday, December 30, 2014

சொல் வரிசை - 74


சொல் வரிசை - 74  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   யாரடி நீ மோகினி (--- --- --- --- உன் பார்வையில் விழுகிற பொழுது)
2.   சந்திப்பு (--- --- --- வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா) 
3.   மது (--- --- --- --- ஊமை ஆனதா உந்தன் ஆசைகள்)
4.   அஞ்சான் (--- --- --- --- மனம் பஞ்சாகும் தன்னாலே)
5.   மணியோசை (--- --- --- --- வயசு வந்த பொண்ணை பார்த்து) 
6.   கைராசி (--- --- --- --- பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல்) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

1 comment:

  1. 1. யாரடி நீ மோகினி - ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
    2. சந்திப்பு - வார்த்தை நானடி கண்ணம்மா
    3. மது - கேட்க வில்லையா நெஞ்சின் ஓசைகள்
    4. அஞ்சான் - ஒரு கண்ஜாடை செய்தாலே
    5. மணியோசை- வருஷம் மாசம் தேடித் பார்த்து
    6. கைராசி - காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்

    இறுதி விடை:

    ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
    - அய்யா

    இத்தனை நாள் ஒரு வார்த்தை "பேச" என்றே நினைத்திருந்தேன். இன்றுதான் அது "கேட்க" என்று தெரிந்தது. நன்றி.

    ReplyDelete