Thursday, March 27, 2014

சொல் வரிசை - 61


சொல் வரிசை - 61 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   கிராமத்து அத்தியாயம் (--- --- --- --- இளம் பூவை ராகமே)
2.   கண்ணுக்கு மை எழுது (--- --- --- நீயும் என் தோலாகவும்) 
3.   எங்க வீட்டுப் பிள்ளை (--- --- --- --- --- இவள் பின்னாலே என் கண் போகும்)
4.   ஓடங்கள்  (--- --- --- கண்ணில் என்ன நீரோட்டம்)
5.   நீதானா அந்தக் குயில் (--- --- --- உன்னைத் தான் தேடுது)
6.   பாத காணிக்கை (--- --- --- --- பூமிக்கு வந்த நிலவே வா)
7.   வரவேற்பு (--- --- வரவேற்கும் மது ரோஜா) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 60 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   பெரிய இடத்துப் பெண் (துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்களெங்கே)
2.   கீதாஞ்சலி  (துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயில் இசை கேட்டு) 
3.   ரட்சகன் (போகும் வழி எல்லாம் காற்றே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்)
4.   பிரியமான தோழி (பெண்ணே நீயும் பெண்ணா  பெண்ணாகிய  ஓவியம்)
5.   கல்யாணியின் கணவன் (சொல்லித் தெரியாது சொல்ல முடியாது)
6.   குலவிளக்கு  (கொண்டு வந்தால் அதை கொண்டு வாவா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)
7.   பாலும் பழமும் (போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா)
8.   பட்டத்து யானை (என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணை விட்டு கண்ணை விட்டு)  
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
துள்ளி துள்ளி போகும் பெண்ணே   
சொல்லிக் கொண்டு போனால் என்ன                             
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     வெளிச்சம்   
         
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

3 comments:

  1. 1. கிராமத்து மின்னல் (பூவே இது பூஜை காலமே இளம் பூவை ராகமே)
    2. கண்ணுக்கு மை எழுது (பூவே நீ நானாகவும் நீயும் என் தோலாகவும்)
    3. எங்க வீட்டுப் பிள்ளை (பெண் போனாள்...இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும்)
    4. ஓடங்கள் (பூவே என்ன போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்)
    5. நீதானா அந்தக் குயில் (என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது)
    6. பாத காணிக்கை (பூஜைக்கு வந்த மலரே வா- பூமிக்கு வந்த நிலவே வா)
    7. வரவேற்பு (வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா)

    இறுதி விடை:
    பாடல்:
    பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

    படம்:
    ஒன்ஸ் மோர்

    ReplyDelete
  2. 1. கிராமத்து மின்னல் - பூவே இது பூஜைக் காலமே
    2. கண்ணுக்கு மை எழுது - பூவே நீ நானாகவும்
    3. எங்க வீட்டுப் பிள்ளை - பெண் போனால் இந்தப்
    4. ஓடங்கள் - பூவே என்ன போராட்டம்
    5. நீதானா அந்தக் குயில்- என் ஜீவன் போடுது
    6. பாத காணிக்கை - பூஜைக்கு வந்த மலரே
    7. வரவேற்பு - வரவேண்டும் மகாராஜா

    இறுதி விடை:
    பூவே பூவே பெண் பூவே
    என் பூஜைக்கு வரவேண்டும்
    - ஒன்ஸ்மோர்

    ReplyDelete
  3. கொடுத்த குறிப்புகளில் முதலாவது திரைப்படத்தின் தலைப்பை முதலில் தவறுதலாக " கிராமத்து மின்னல் " என்று தவறுதலாக கொடுத்துவிட்டேன். "கிராமத்து அத்தியாயம்" என்ற தலைப்பு தான் சரியானது. தவறினை திரு முத்து சுப்ரமண்யம் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள். அவருக்கு மிக்க நன்றி. தவறினை திருத்திவிட்டேன். செய்த தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete