Monday, April 27, 2015

சொல் வரிசை - 78

 
சொல் வரிசை - 78  புதிருக்காக, கீழே    (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     எஜமான்  (--- --- --- புது ராக்குடியை சூட்டு)
2.    என் கடமை ( --- --- --- தேரெது தேரெது வைரமா)
3.    நெஞ்சமெல்லாம் நீயே  (--- --- --- --- தாளாத பெண்மை  வாடுமே வாடுமே) 
4.    நேற்று இன்று நாளை (--- --- --- அது வசந்தத்தின் தேரோ)
5.     அரண்மனைக்கிளி ( --- --- --- காக்க மறந்திட்ட பாவியடி  கிளியே)

6.    இயற்கை  (--- --- --- --- உயிரோடிருந்தால் வருகிறேன்)
7.    நாங்க (--- --- --- இப்படி ஆனதில்லை எப்படி மாறிவிட்டேன்)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, 
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
 
 

1 comment:

  1. 1. எஜமான் - அடி ராக்கு முத்து ராக்கு
    2. என் கடமை - யாரது யாரது தங்கமா
    3. நெஞ்சமெல்லாம் நீயே - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
    4. நேற்று இன்று நாளை - அங்கே வருவது யாரோ
    5. அரண்மனைக்கிளி - என் தாயெனும் கோவிலை
    6. இயற்கை - காதல் வந்தால் சொல்லி அனுப்பு
    7. நாங்க -

    இறுதி விடை :
    அடி யாரது யாரது அங்கே
    என் காதல் தேவதையா
    - மேட்டுக்குடி

    ReplyDelete