Friday, September 28, 2018

சொல் வரிசை - 193




சொல் வரிசை - 193   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பரதன் (---  --- பொங்கவரும் முத்தாரம்)
  
2.   அண்ணாமலை (---  ---  --- கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட)
  

3.   கல்கி (---  ---  --- அருள் தேடும் நெஞ்சமே)

4.   கிளிப்பேச்சு கேட்கவா (---  --- நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே)  

5.   அமராவதி (---  ---  ---  --- நாம் பிறந்தது வாழ்ந்திடத் தானே) 

6.   தங்கப்பதுமை (---  ---  --- விரல் நகத்தில் பவழத்தின் நிறம்)


7.   புதையல் (---  ---  --- நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே) 


8.   டைம் (---  ---  --- உன் நெஞ்சின் வண்ணம் என்ன)


9.   மக்களை பெற்ற மகராசி (---  --- உனக்கு தெரியுமா சொந்தமுள்ள மச்சான்னு)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற   திரைப்படத்தின்    பெயரையும்  கண்டுபிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. பரதன் - புன்னகையில் மின்சாரம்

    2. அண்ணாமலை - ஒரு பெண் புறா

    3. கல்கி - பொருள் தேடும் உலகிலே

    4. கிளிப்பேச்சு கேட்கவா - வந்தது வந்தது

    5. அமராவதி - பூ மலர்ந்தது பூமிக்குத்தானே

    6. தங்கப்பதுமை - முகத்தில் முகம் பார்க்கலாம்

    7. புதையல் - தங்க மோகன தாமரையே

    8. டைம் - நிறம் பிரித்தது பார்த்தேன்

    9. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு

    இறுதி விடை :
    புன்னகையில் ஒரு பொருள் வந்தது
    பூ முகத்தில் தங்க நிறம் வந்தது
    - பவானி

    ReplyDelete