Sunday, December 17, 2017

சொல் அந்தாதி - 85



சொல் அந்தாதி - 85  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மறுபடியும் -  ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வச்சு

2.  ஆயிரங்காலத்து பயிரு      

3.  கடைசி பெஞ்ச் கார்த்தி        

4.  தெரு நாய்கள்             

5.  சர்வர் சுந்தரம்        

                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.gaana.com

ராமராவ் 

2 comments:

  1. 1.ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வச்சு
    2.மாமா பிள்ளை மாப்பிள்ளை
    3.கண்ணாடி பூவாய் காதில் மின்னும் மின்னும்
    4.கண்கள் கதை பேசுதோ
    5.போகப் போகத் தெரியும்

    -மாதவ்

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 28.12.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. மறுபடியும் - ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வச்சு ......மாமா என் மாமா

    2. ஆயிரங்காலத்து பயிரு மாமா பிள்ளே மாப்பிள்ளே....... அம்மா பொன்னு ராசாத்தி உன் அழகை காட்டும் கண்ணாடி

    3. கடைசி பெஞ்ச் கார்த்தி கண்ணாடி பூவாய்......ஓவியம் வரையும் கண்கள்

    4. தெரு நாய்கள் கண்கள் கதை பேசுவதேனொ..... வார்த்தை வராமல் போக

    5. சர்வர் சுந்தரம் போக போக தெரியும்.... இந்த பூவின் வாசம் புரியும்..

    ReplyDelete