Wednesday, November 4, 2015

சொல் வரிசை - 93

சொல் வரிசை - 93  புதிருக்காக,  கீழே  எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     இம்சை அரசன் 23 ம் புலிகேசி ( --- --- --- --- காதல் உலகம் காண வா)  
2.     ரட்சகன் (--- --- --- --- நினைவினில் கடந்து விடு)
3.     மனசெல்லாம் (--- --- --- என் கண்கள் தூங்காது கண்மணியே ஓ கண்மணியே)  
4.     உதய கீதம் (--- --- --- கவிதை பூ மலர)
5.     படித்தால் மட்டும் போதுமா (--- --- --- இது அன்பால் விளைந்த பழியம்மா)
6.     ராஜா தேசிங்கு (--- --- சலங்கை சத்தம்)
7.     நான் ஆணையிட்டால் (--- --- --- தமிழ் மேல் ஆணை)  
8.     பதிபக்தி (--- --- --- --- நாடி நிக்குதே அநேக நன்மையே உண்மையே)      
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

4 comments:

  1. ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு from தாய் வீடு

    ReplyDelete

  2. 1. இம்சை அரசன் 23 ம் புலிகேசி - ஆசைக் கனவே அதிசய நிலவே
    2. ரட்சகன் - நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
    3. மனசெல்லாம்- நீ தூங்கும் நேரத்தில்
    4. உதய கீதம் - பாடு நிலாவே தேன்
    5. படித்தால் மட்டும் போதுமா - அண்ணன் காட்டிய வழியம்மா
    6. ராஜா தேசிங்கு - வந்தான் பாரு
    7. நான் ஆணையிட்டால் - தாய் மேல் ஆணை
    8. பதிபக்தி - வீடு நோக்கி ஓடி வந்த என்னையே

    இறுதி விடை :
    ஆசை நெஞ்சே நீ பாடு
    அண்ணன் வந்தான் தாய் வீடு
    - தாய் வீடு

    ReplyDelete
  3. விடுதலுக்கு மன்னிக்கவும்.

    1. ஆசை நிலவே
    2. நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
    3. நீ தூங்கும் நேரத்தில்
    4. பாடு நிலாவே பூங்கவிதை
    5. அண்ணன் காட்டிய வழியம்மா
    6. வந்தான் பாரு சலங்கை சத்தம்
    7. தாய் மேல் ஆணை
    8. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே


    படம்: தாய் வீடு
    பாட்டு : ஆசை நெஞ்சே நீ பாடு....
    அண்ணன் வந்தான் தாய் வீடு.

    அம்மம்மா என்னென்னவோ கனவு
    என் விழியில் உன் கனவே
    என் நாள் வரையில்.
    அம்மம்மா என்னென்னவோ கனவு
    என் விழியில் உன் கனவே
    என் நாள் வரையில்...!

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 4.11.2015 அன்று அனுப்பிய விடை:

    padam: thaay veedu

    பாடல் : ஆசை நெஞ்சே நீ பாடு

    அண்ணன் வந்தான் தாய் வீடு

    ReplyDelete