சொல் வரிசை - 57 புதிருக்காக, கீழே 8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இதய வீணை (--- --- --- மெல்ல சிரித்தால் என்ன)
2. சந்திப்பு (--- --- --- நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு)
3. பூட்டாத பூட்டுக்கள் (--- --- --- --- ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது)
4. கிழக்கு வாசல் (--- --- --- தந்ததே ஓ சம்மதம்)
5. காதலுக்கு மரியாதை (--- --- --- தினம் எங்களின் வீட்டுக்குள்ளே)
5. காதலுக்கு மரியாதை (--- --- --- தினம் எங்களின் வீட்டுக்குள்ளே)
6. என் ராசாவின் மனசிலே (--- --- --- வந்ததென்ன இளமானே)
7. இளமைக் காலங்கள் (--- --- --- --- சுகராகம் பொழியும்)
8. மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- --- --- பாட்டுப் பாடு காளை என்னோடு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 56 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. பருவராகம் (பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
2. ஆனந்த ஜோதி (பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா)
3. ஒன்ஸ் மோர் (பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்)
4. தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து)
5. சொல்லத்தான் நினைக்கிறேன் (மலர் போல் சிரிப்பது பதினாறு மனம் போல் பறப்பது)
6. நினைத்ததை முடிப்பவன் (தானே தானே தன்னான தானே தானே உன் மேனி தள்ளாடலாமா)
5. சொல்லத்தான் நினைக்கிறேன் (மலர் போல் சிரிப்பது பதினாறு மனம் போல் பறப்பது)
6. நினைத்ததை முடிப்பவன் (தானே தானே தன்னான தானே தானே உன் மேனி தள்ளாடலாமா)
பூவே பனிப் பூவே நானும் மலர் தானே
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: நிலவு சுடுவதில்லை
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. இதய வீணை (ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன)
ReplyDelete2. சந்திப்பு (ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு)
3. பூட்டாத பூட்டுக்கள் (ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது)
4. கிழக்கு வாசல் (வந்ததே ஓ.. குங்குமம் தந்ததே ஓ சம்மதம்)
5. காதலுக்கு மரியாதை (ஆனந்த குயிலின் பாட்டுதினம் எங்களின் வீட்டுக்குள்ளே)
6. என் ராசாவின் மனசிலே (குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே)
7. இளமைக் காலங்கள் (இசைமேடையில்,இந்த,வேளையில் சுகராகம் பொழியும்)
8. மாடி வீட்டு மாப்பிள்ளை (கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு)
இருதி விடை:
பாடல் தொடக்கம்:
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே ஆனந்த குயில் இசை கேட்டு
பாடல் இடம் பெற்ற படம்: முறை மாமன்
1. இதய வீணை - ஆனந்தம் இன்று ஆரம்பம்
ReplyDelete2. சந்திப்பு - ஆனந்தம் விளையாடும் வீடு
3. பூட்டாத பூட்டுக்கள் - ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
4. கிழக்கு வாசல் - வந்ததே ஓ ஓ குங்குமம்
5. காதலுக்கு மரியாதை - ஆனந்தக் குயிலின் பாட்டு
6. என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு ஓ வந்ததென்ன
7. இளமைக் காலங்கள் - இசை மேடையில் இந்த வேளையில்
8. மாடி வீட்டு மாப்பிள்ளை - கேட்டு பாரு கேள்விகள் நூறு
இறுதி விடை :
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே
ஆனந்தக் குயில் இசை கேட்டு
- முறைமாமன்