Friday, January 24, 2014

சொல் அந்தாதி - 17

 
சொல் அந்தாதி   17     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  குடியிருந்த கோயில்  -  குங்குமப் பொட்டின் மங்கலம்        
 
2.  நாடோடி                          
 
3.  தாழம்பூ                
 
4.  குமாஸ்தாவின் மகள்                

5.  வண்ணத் தமிழ் பாட்டு                  
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  16 புதிருக்கான விடைகள்:  
 
1.  நிறைகுடம்  -  விளக்கே நீ கொண்ட ஒளி நானே       
 
2.  மலைக்கள்ளன்  -  நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா                        
 
3.  பாசமலர்   -  வாராய் என் தோழி வாராயோ               
 
4.  மிஸ்ஸியம்மா   - வாராயோ வெண்ணிலாவே               

5.  செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா                           
 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்

 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Thursday, January 23, 2014

சொல் வரிசை - 55


சொல் வரிசை - 55   புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சங்கர்லால் (--- --- --- பலர் கண் பார்வையில் இன்று)
2.   உடன் பிறப்பு (--- --- --- --- தேனே தென்மண்டலத்து ராஜ விளக்கே)
3.   புதுப்புது அர்த்தங்கள் (--- --- --- --- என் பாட்டை கேளு உண்மைகள்)
4.   உள்ளம் கவர்ந்த கள்வன் (--- --- --- --- மலரும் பூவே வளரும்  காற்றே)
5.   கச்சேரி ஆரம்பம் (--- --- --- --- கண்ணாலே என்னை நீ பார்த்தா)
6.   உதய கீதம்  (--- --- தேன் கவிதை பூ மலர)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 54 க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம்

1.   நான் ராஜாவாகப் போகிறேன் (எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம்)
2.   வணக்கம் வாத்தியாரே (வந்த இடம் நல்ல இடம் வாசம் மிகுந்த இடம்)
3.   உத்தம ராசா (இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது)
4.   குங்குமம் (மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி)
5.   ஸ்ரீராகவேந்திரர் (உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் விடிய விடிய சொந்தம்)
6.   கலைக்கோவில் (வரவேண்டும் ஒரு பொழுது வராமலிருந்தால் சுவை தெரியாது)   
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
எனக்கு வந்த இந்த மயக்கம்     
உனக்கும் வரவேண்டும்                           

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     நீ      

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.   மாதவ் மூர்த்தி 
2.   முத்து சுப்ரமண்யம்   
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.