Thursday, November 1, 2018

சொல் வரிசை - 196



சொல் வரிசை - 196   புதிருக்காக, கீழே  ஆறு  (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அலைகள் ஓய்வதில்லை(---  ---  ---  --- உயிரில் கலந்த உறவே)
  
2.   குட்டி(---  ---  ---  --- என் காதல் முள்ளோ  மலரோ)
  
3.   தீர்த்தக் கரையினிலே(---  ---  ---  ---  --- இதழில் ஒரு அமுதம் குடித்தேன்)

4.   உரிமைக்குரல்(---  ---  --- வந்த உடன்பிறப்பில்)  

5.   கோபுரங்கள் சாய்வதில்லை(---  ---  ---  வந்து ஆடை தீண்டுமே) 

6.   ஜகன்மோகினி(---  ---  ---  --- குத்துது எனையே சொல்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற   திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. அலைகள் ஓய்வதில்லை - விழியில் விழுந்து இதயம் நுழைந்து

    2. குட்டி - என் காதல் சரியோ தவறோ

    3. தீர்த்தக் கரையினிலே - விழியில் புதுக் கவிதை படித்தேன்

    4. உரிமைக்குரல் - ஒரு தாய் வயிற்றில் வந்த

    5. கோபுரங்கள் சாய்வதில்லை - பூ வாடைக் காற்று

    6. ஜகன்மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு

    இறுதி விடை :
    விழியில் என் விழியில்
    ஒரு பூ பூத்தது
    - ராம் லக்ஷ்மன்

    ReplyDelete