Friday, September 5, 2014

சொல் வரிசை - 69


சொல் வரிசை - 69  புதிருக்காக, கீழே   9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   கர்ணன் (--- --- --- --- --- கண்ணில் புன்னகை சுமந்து போய் வா)
2.   அபியும் நானும் (--- --- --- --- பொன் வாய் பேசும் தாரகையே) 
3.   தங்க மீன்கள் (--- --- --- என் மீனே மீனே நீ நீந்திய பொன்)
4.   திருக்கல்யாணம் (--- --- --- ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்)
5.   பிரம்மா (--- --- --- எழுந்து ஆடும் மலர்கொடி)
6.   பார் மகளே பார் (--- --- --- --- --- போகுமிடம் சொல்லாமல் ஓடிவிட்டாயே)
7.   பணக்காரப்பெண் (--- --- --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை)
8.   மணப்பந்தல் (--- --- --- பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி)
9.   மெல்ல திறந்தது கதவு (--- --- --- --- வானம் தேடுதே) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

1 comment:


  1. 1. கர்ணன் (--- --- --- --- --- கண்ணில் புன்னகை சுமந்து போய் வா) - போய் வா மகளே போய் வா
    2. அபியும் நானும் (--- --- --- --- பொன் வாய் பேசும் தாரகையே) - வா வா என் தேவதையே
    3. தங்க மீன்கள் (--- --- --- என் மீனே மீனே நீ நீந்திய பொன்) - நதி வெள்ளம் மேலே
    4. திருக்கல்யாணம் (--- --- --- ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்) - அலையே கடல் அலையே
    5. பிரம்மா (--- --- --- எழுந்து ஆடும் மலர்கொடி) - இவள் ஒரு இளங்குருவி
    6. பார் மகளே பார் (--- --- --- --- --- போகுமிடம் சொல்லாமல் ஓடிவிட்டாயே) - பூச்சூடும் நேரத்திலே போய்விட்டாயே அம்மா
    7. பணக்காரப்பெண் (--- --- --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை) - நாள் நல்ல நாள்
    8. மணப்பந்தல் (--- --- --- பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி) - பார்த்து பார்த்து நின்றதிலே
    9. மெல்ல திறந்தது கதவு (--- --- --- --- வானம் தேடுதே) - வா வெண்ணிலா உன்னைத் தானே

    இறுதி விடை :

    போய் வா நதி அலையே இவள்
    பூச்சூடும் நாள் பார்த்து வா.

    - பல்லாண்டு வாழ்க

    ReplyDelete