Sunday, August 3, 2014

சொல் வரிசை - 68

 
சொல் வரிசை - 68  புதிருக்காக, கீழே   8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   மீண்டும் ஒரு காதல் கதை (--- --- --- --- எங்கெங்கிலும் ஆலாபனை)
2.   எஜமான் (--- --- --- என்னை பார்த்து ஒளி வீசு) 
3.   சொன்னது நீதானா (--- --- --- அழகாடும் பூஞ்சோலையே)
4.   காதல் வானிலே (--- --- --- சிறகாய் நீ வா)
5.   பராசக்தி (--- --- --- --- --- உந்தன் எண்ணத்தை சொல்லி விட்டு போங்க)
6.   நெஞ்சில் ஒரு முள்  (--- --- --- இனி நாளும் பாடலாம்)
7.   நான் ஏன் பிறந்தேன் (--- --- --- நலமாக வேண்டும்)
8.   நான் பாடும் பாடல் (--- --- --- என் வாழ்விலே ஒரே பொன் வேளை)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

3 comments:

  1. அதிகாலை நிலவே ....அலங்கார சிலையே
    புது ராகம் நீ பாடவா
    திரைப்படத்தின் பெயர் ( உறுதி மொழி)
    இருந்தாலும் ரொம்ப அநியாயம் சார் நீங்க மண்ட காய வச்சுடீங்க

    ReplyDelete
    Replies
    1. உங்களது விடை சரி. பாராட்டுக்கள்.
      உங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்து திரைஜாலம் புதிர்களில் பங்கேற்று விடைகளை அனுப்புங்கள்.
      தயவு செய்து உங்கள் இ-மெயில் முகவரி அனுப்பவும்.

      Delete
  2. திரு மாதவ் மூர்த்தி அனுப்பிய சரியான விடை:

    " the answer for Solvarisai :

    1. மீண்டும் ஒரு காதல் கதை (--- --- --- --- எங்கெங்கிலும் ஆலாபனை) - அதிகாலை நேரமே புதிதான ராகமே
    2. எஜமான் (--- --- --- என்னை பார்த்து ஒளி வீசு) - நிலவே முகம் காட்டு
    3. சொன்னது நீதானா (--- --- --- அழகாடும் பூஞ்சோலையே) - அலங்காரப் பொன் ஊஞ்சலே
    4. காதல் வானிலே (--- --- --- சிறகாய் நீ வா) - சிலையே நீ வா
    5. பராசக்தி (--- --- --- --- --- உந்தன் எண்ணத்தை சொல்லி விட்டு போங்க) - புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே
    6. நெஞ்சில் ஒரு முள் (--- --- --- இனி நாளும் பாடலாம்) - ராகம் புது ராகம்
    7. நான் ஏன் பிறந்தேன் (--- --- --- நலமாக வேண்டும்) - நன் பாடும் பாடல்
    8. நான் பாடும் பாடல் (--- --- --- என் வாழ்விலே ஒரே பொன் வேளை) - பாடவா உன் பாடலை

    இறுதி விடை :
    அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே
    புது ராகம் நான் பாடவா
    - உறுதிமொழி "

    ReplyDelete