சொல் அந்தாதி - 19 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாக்கியலட்சுமி - காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
2. மாயி
3. ருசி கண்ட பூனை
4. கண்ணுக்கொரு வண்ணக்கிளி
5. படிக்காத பண்ணையார்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 18 புதிருக்கான விடைகள்:
1. பெண்ணே நீ வாழ்க - உயிர் நீ உனக்கொரு உடல் நான்
3. இதயத்தில் நீ - யார் சிரித்தால் என்ன
5. நான் போட்ட சவால் - சுகம் சுகமே ஹேய் தொடத் தொடத் தானே
2. குடியிருந்த கோயில் - நான் யார் நான் யார் நீ யார்
3. இதயத்தில் நீ - யார் சிரித்தால் என்ன
4. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்
5. நான் போட்ட சவால் - சுகம் சுகமே ஹேய் தொடத் தொடத் தானே
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
No comments:
Post a Comment