Monday, February 24, 2014

சொல் அந்தாதி - 19


 
சொல் அந்தாதி  -  19     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பாக்கியலட்சுமி   -  காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே          
 
2.  மாயி                            
 
3.  ருசி கண்ட பூனை                  
 
4.  கண்ணுக்கொரு வண்ணக்கிளி                   

5.  படிக்காத பண்ணையார்                     
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  18 புதிருக்கான விடைகள்:  
 
1.  பெண்ணே நீ வாழ்க   -  உயிர் நீ உனக்கொரு உடல் நான்         
 
2.  குடியிருந்த கோயில்  - நான் யார் நான் யார் நீ யார்                           
 
3.  இதயத்தில் நீ  - யார் சிரித்தால் என்ன                
 
4.  பல்லாண்டு வாழ்க  - என்ன சுகம் என்ன சுகம்                 

5.  நான் போட்ட சவால் - சுகம் சுகமே ஹேய் தொடத் தொடத் தானே          
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1.  முத்து சுப்ரமண்யம்
2.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

No comments:

Post a Comment