Tuesday, March 10, 2015

சொல் வரிசை - 75


சொல் வரிசை - 75  புதிருக்காக, கீழே   7  (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   ஆயிரத்தில் ஒருவன் (--- --- --- --- வாழவேண்டும் இதோ இந்த அலைகள்)
2.   காக்கி சட்டை  ( --- --- --- பாடுதே வானம்பாடி ஆகலாமா)
3.   செம்பருத்தி  (--- --- --- --- உலா போக நீயும் வரணும்) 
4.   கடலோரக் கவிதைகள் (--- --- --- --- வானிலே நானும் சேர்ந்து போகவும்)
5.   பத்துமாத பந்தம் ( --- --- --- --- நான் அறியாத பெண்ணல்லவோ)
6.   நிமிர்ந்து நில் (--- --- --- --- மன்னவனின் சன்னதியில்)
7.   பெண் என்றால் பெண் ( --- --- --- தெய்வம் என்னை பார்க்கவில்லை)
 
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, 
அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
                                
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  சமீபத்தில் (இந்த வருடம்) வெளிவந்த 2 எழுத்து   திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

1 comment:

  1. 1. ஆயிரத்தில் ஒருவன் (--- --- --- --- வாழவேண்டும் இதோ இந்த அலைகள்) - அதோ அந்த பறவை போல
    2. காக்கி சட்டை ( --- --- --- பாடுதே வானம்பாடி ஆகலாமா) - வானிலே தேனிலா ஆடுதே
    3. செம்பருத்தி (--- --- --- --- உலா போக நீயும் வரணும்) - நிலா காயும் நேரம் சரணம்
    4. கடலோரக் கவிதைகள் (--- --- --- --- வானிலே நானும் சேர்ந்து போகவும்) - போகுதே போகுதே என் பைங்கிளி
    5. பத்துமாத பந்தம் ( --- --- --- --- நான் அறியாத பெண்ணல்லவோ) - எதை கேட்பதோ எதை சொல்வதோ
    6. நிமிர்ந்து நில் (--- --- --- --- மன்னவனின் சன்னதியில்) - தேடி வரும் தெய்வ சுகம்
    7. பெண் என்றால் பெண் ( --- --- --- தெய்வம் என்னை பாக்கவில்லை)- தேடி தேடி காத்திருந்தேன்

    இறுதி விடை :
    அதோ வானிலே நிலா போகுதே
    எதை தேடி தேடி
    - இசை

    ReplyDelete