Wednesday, September 4, 2013

சொல் வரிசை - 39


சொல் வரிசை - 39  புதிருக்காக, கீழே  6 (ஆறு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. அவள் தந்த உறவு                                    ( ------ -------   என் நெஞ்சம் இனிக்கின்றது )
2. கேள்வியும் நானே பதிலும் நானே      ( ------- -------- வரைந்த ஓவியம் )
3. அவசர கல்யாணம்                                 ( ------- -------- முகம் பார்க்க வேண்டும் )
4. நேற்று இன்று நாளை                            ( ------- ------- பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் )
5. களத்தூர் கண்ணம்மா                           ( ------- ------- உருகி நின்றாள் அன்பு தந்தாளே )
6. மல்லிகா                                                  ( ------- ------ ------ மாளிகையின் வாசலுக்கே )
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 38 க்கான விடைகள்:
திரைப்படம்                                  பாடலின் தொடக்கம்                         
 
1. ரத்தத்திலகம்                           ( தாழம்பூவே தங்க நிலாவே தலை என் குனிகிறது)
2. பூப் பூவா பூத்திருக்கு       ( வாசம் சிந்தும் வண்ணச் சோலை என் வாசல் தேடி வந்த வேளை )
3. பொன்னித் திருநாள்        ( வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு )
4. தங்கைக்காக                   ( தாயின் முகம் இங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது)
5. குலதெய்வம்                    ( தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன்)
6. எங்கள் அண்ணா            ( கொஞ்சி கொஞ்சி பேசும் மைனாவே ஜில்லென்று சிரிக்கும் ரோஜாவே)
7. விடியும்வரை காத்திரு  ( பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்)

 
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

தாழம்பூவே வாசம் வீசு 
தாயின் தாயே கொஞ்சி பேசு                   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      கை கொடுக்கும் கை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி.

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete