Tuesday, May 28, 2013

எழுத்துப் படிகள் - 26



எழுத்துப் படிகள் - 26 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்.  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)  எம்.ஜி.ஆர்  நடித்ததே.  

 
மேலும் வழக்கம் போன்ற குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   பல்லவன் . (4,4)
      (ஒரு கோடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா )   
2.   முத்து, மாணிக்கம், மரகதம், தங்கம் ........    (7)
      (மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் )  
3.   லவ்வர்ஸ் வண்டி   (3,4)
      (நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு )

4.   மெய்யிழந்த பலிக்கு காவலே மாற்று தேசம்  (6)
      (மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
5.   செல்வந்தர் வீட்டோர் (5,5)
          (பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது ) 
6.    எனது தமையன்   (2,4)
       (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா )


 

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 25 க்கான குறிப்புகளின் விடைகள்:

 
1.   பாராட்டப்படும் கண்ணழகி நடிகை . (3,2)   -   சபாஷ் மீனா 
      (சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி)   
2.   மயங்கவைக்கும் புன்சிரிப்பு    (4,4)                   -    மோகனப் புன்னகை 
      (----- ----- வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே)  
3.   இது ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்  (5,5)  - நல்லதொரு குடும்பம் 
      (சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்)
4.   பெண்ணுக்கு வரன் வேண்டும் (5,2)                 -    மணமகன் தேவை  
      (பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே)
5.    இந்திய இல்லம் ?  (3,3)                                           -    பாரத விலாஸ் 
       (இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு) 
6.     பள்ளி செல்லாதவன் ?  (7)                                   -   படிக்காதவன் 
       (ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி)
7.    சிவலீலை  (7)                                                              -    திருவிளையாடல் 
       (பாட்டும் நானே பாவமும் நானே)   
8.    திருமண ஒப்பந்த சடங்கு   (4,5)                       -     நிச்சய தாம்பூலம் 
       (பாவாடை தாவணியில் பார்த்த உருவமா)
9.    அரசரும் சிறியவரும் (5,5)                                    -     மன்னவரு சின்னவரு 
        (மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே)
10.   காமராஜர் பற்றி சாவி எழுதிய புத்தகம்  (6,4) - சிவகாமியின் செல்வன்         (அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி)

 
 
இறுதி விடை:   சகலகலா வல்லவன்      
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  முத்து,  Madhav, யோசிப்பவர், 10அம்மா, சாந்தி நாராயணன்      
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்


3 comments:

  1. சாந்தி நாராயணன்,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  2. Suji,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  3. Madhav,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete